மும்பையை வீழ்த்தி ஐபிஎல் சாம்பியனாக முடிசூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
Posted by Pirem | 12:26 PM | IPL | 0 comments »சென்னை கிங்ஸ் எழுச்சி தொடருமா?: இன்று மும்பை அணியுடன் மோதல்
Posted by Pirem | 12:15 AM | IPL | 0 comments »கடந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, இன்றும் தனது அசத்தலை தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மும்பை இன்று, வென்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற நினைக்கலாம்.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று சென்னையில் நடக்கும் 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
தொடருமா எழுச்சி?
தொடர்ச்சியான நான்கு தோல்விக்கு பின் எழுச்சி கண்ட சென்னை அணி, பேட்டிங் எழுச்சி பெற்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை வென்றது. இன்றும் இது தொடரும் என நம்பலாம். இதற்கு, "அதிரடி' நாயகன் முரளி விஜய், ரெய்னா, தோனி மற்றும் மார்கல் உதவுவார்கள் என தெரிகிறது. தவிர, கடந்த சில போட்டிகளில் ஏமாற்றும் ஹைடன் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் மைக்கேல் ஹசி, வாய்ப்பு பெறுவது உறுதி.
சச்சின் பலம்:
கடந்த இரு தொடர்களில் இல்லாத வகையில், இம்முறை மும்பை அணி பெரும் எழுச்சி கண்டுள்ளது. இதற்கு சச்சினின் அசத்தலான "பார்ம்' மற்றும் இளம் வீரர்கள் எழுச்சியும் காரணம். தவிர, இன்று ஜெயசூர்யா, இதுவரை வாய்ப்பு பெறாத டுமினி ஆகியோர் களமிறங்கலாம். திவாரி, ராயுடு, சதீஷ் இன்றும் கலக்க காத்திருக்கிறார்கள்.
"பெஸ்ட்' பவுலிங்:
மும்பை அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஜாகிர் கான், மெக்லாரென், மலிங்கா போன்றவர்கள் இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அசத்துகிறார்கள். கடைசி நேரத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசுவதில் வல்லவர்களான இவர்கள், எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப் படுத்துகின்றனர். சுழலில் ஹர்பஜன் மிரட்டல் தொடர்கிறது.
"டுவென்டி-20' போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இன்று "டாஸ்' வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது உறுதி. இருப்பினும், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் விளையாடிய சென்னை அணி, 180 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. இதனால் இன்று கவனமாக விளையாடுவார்கள் என நம்பலாம்.
சென்னை அணி இதுவரை, பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ல் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. அடுத்த 5 போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றால் தான், அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. ஆனால் மும்பை அணியை பொறுத்த வரையில், பங்கேற்ற 8 போட்டியில் 7ல் வென்றுள்ளது. அடுத்து 6ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே, அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இதனால் இன்றைய போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபாரமாக ஆடிய இராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
Posted by Pirem | 7:51 AM | IPL | 0 comments »
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய் 39 பந்துகளில் 78 ரன்களை விளாசினார்.
இருப்பினும் கடைசியில் தோனியையும், மோர்கெல்லையும் அடுத்தடுத்து ஸ்டெய்னும், காலிஸும் வீழ்த்த கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது வினய் குமார் பந்து வீச பத்ரிநாத் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா இதில் கிராஸ் செய்து பேட்டிங் முனைக்கு வந்து அடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபாரமாஅன சிகருக்குத் தூக்க ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாகத் திரும்பியது.
துவக்கத்தில் முரளி விஜய் இன்று அனாயாச மட்டை சுழற்றலில் ஈடுபட்டார். அவர் பிரவீண் குமாரின் 2-வது ஓவரில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாச ஸ்கோர் 3 ஓவர்கள் முடிவில் 38 ரன்களை எட்டியது.
அதன் பிறகு அனில் கும்ளே பந்து வீச வந்தார் அப்போது 12 ரன்கள் எடுத்த ஹெய்டன் ஸ்டம்ப்டு ஆனார்.
ஆனால் அதன் பிறகும் முரளி விஜய் நிறுத்தவில்லை. அவர் கெவின் பீட்டர்சன் பந்துகளில் மேலும் 3 சிக்சரக்ளை வெளுத்தார். 4 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் அடித்த முரளி விஜய் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 105/2 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு கும்ளே 4 ஓவர்களில் 16 ரன்களையே விட்டுக் கொடுத்தார். டேல் ச்டெய்ன் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதனால் தோனி 19 பந்துகளில் 14 ரன்கள் என்று பிளேடு போட்டு ஆட்டமிழந்ததால் 16.3 ஓவரில் ஸ்கோர் 138 ரன்களைத்தான் எட்ட முடிந்தது.
இது ரெய்னாவிற்கு சுமையை ஏற்றியது. இன்னொரு முனையில் மோர்கெல் விக்கெட்டை ஜாக் காலிஸ் வீழ்த்த, பத்ரிநாத், வினய் குமாரிடம் ஆட்டமிழந்தார். இதனால் லேசான டென்ஷன் ஏற்பட்டது.
ஆனால் ரெய்னா கடைசியில் சிக்சர், பவுண்டரி அடித்து 19-வது ஓவரிலேயே வெற்றியை ருசிக்கச் செய்தார். இவர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
சென்னை அணி 165/5 என்று வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் போட்டியில் டோணியால் தொடர்ந்து விளையாட முடியும்: சென்னை சூப்பர் கிங்ஸ் விளக்கம்
Posted by Pirem | 8:52 PM | IPL | 0 comments »
காயம் காரணமாக கேப்டன் டோணி 10 நாள் ஓய்வில் இருப்பார் என்று வெளியான செய்தி தவறு. அவரால் விரைவிலேயே விளையாட முடியும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டோணிக்கு காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் பத்து நாள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து பத்து நாட்கள் டோணி விளையாட மாட்டார், அவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என செய்திகள் வெளியாகின.
இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி அதிகாரி ருஸ்ஸல் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை டோணி நல்ல நிலைக்குத் திரும்பினால், அவரால் செவ்வாய்க்கிழமையன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் நிச்சயம் விளையாட முடியும்.ட
அவருக்கு 10 நாள் ஓய்வு அளிக்கப்படவில்லை. அவரால் முடிந்தால் நிச்சயம் விளையாடுவார் என்றார்.
முன்னதாக சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன் கூறுகையில், டோணியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என்று கூறியிருந்தார். பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை டெல்லியில், டெல்லி அணியையும், ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் சந்திக்கவுள்ளது.
டோணி இன்னும் முழு உடல் தகுதியைப் பெறாத காரணத்தால் இந்த இரு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சார்பாக தோனி ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் பத்ரினாத் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் முரளி விஜய் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களைடும் இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
சென்னைசூப்பர் கிங்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 2010 IPL தொடரில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்து சறுக்கலுடன் 3வது ஐபிஎல் தொடரை ஆரம்பித்துள்ள டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆடிய இரு போட்டிகளிலும் அசத்தலாக வெற்றி பெற்ற தெம்புடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸை இன்று சந்திக்கிறது.
அதேபோல இன்னொரு போட்டியில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சங்கக்காரா தலைமையிலன கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது. இந்த இரு அணிகளும் தத்தமது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் டோணி தலைமையிலான சென்னை அணி ஆயத்தமாகி வருகிறது. அதேசமயம், ஹாட்ரிக் வெற்றியை சுவைக்க ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா அணி உறுதியுடன் உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளை வீழ்த்தியது. ஆனால் 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியுற்றது. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து தொடரில் 6வது இடத்தையே பிடித்தது.
இந்த ஆண்டு தொடரிலும் முதல் இரு போட்டிகளில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தியுள்ளது கங்குலி தலைமையிலான கொல்கத்தா. தற்போது 3வது போட்டியாக சென்னையை சந்திக்கவுள்ளது. 2008ல் நடந்தது போல இந்த ஆண்டும் நடந்து விடுமோ என்ற பீதி கொல்கத்தா ரசிகர்களின் மனதில் உள்ளது.
ஆனால் அப்படி நடந்து விடாமல் தடுத்து வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் கொல்கத்தா அணி உள்ளது. எனவே இந்தப் போட்டி பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில் மழையால் பாதிப்பு வரலாம் என்று தெரிகிறது. எனவே கொல்கத்தா வீரர்கள் சற்று கவலையுடன் காணப்படுகின்றனர்.
ஆறுதல் தேடும் முயற்சியில் பெங்களூர், பஞ்சாப்...
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாபும், பெங்களூரும், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மோதவுள்ளன.
பெங்களூர் அணி தனது முதல் போட்டியில், கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்தது. அதேபோல பஞ்சாப் அணியை முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் காலி செய்தது.
பெங்களூரும், பஞ்சாபும் இதற்கு முன்பு 4 முறை மோதியுள்ளன. இதில் 3 முறையும் பஞ்சாபே வென்றது. ஒரு முறை மட்டுமே பெஙகளூர் வெற்றி பெற்றது.
இன்று உகாதி தினம். எனவே பெங்களூர் ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக வெற்றியைத் தருமா பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடின.இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி டாஸ் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரண்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில்150 ரன்கள் எடுத்தது.
11 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர் வெற்றி பெற்றது.




