Showing posts with label IPL. Show all posts
Showing posts with label IPL. Show all posts

சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 2010 இன் ஐ.பி.எல் சாம்பியனாக முடிசூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்! இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, மும்பை அணியின் அதிரடி பந்துவீச்சுக்கு, சற்று திணறியது.

எனினும் சுதாகரித்துக்கொண்டனர். ஆரம்பத்தில் களமிறங்கிய முரளி விஜய் 6 சிக்ஸர்கள், 1 பவுன்றிகள் அடங்களாக 19 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார். அவருடன் இணைந்தாடிய மத்திவ் ஹேய்டன் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய, மாஷ்ட்டர் பிளாஷ்ட்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரைனாவின், (57) சளைக்காத ஆட்டம், அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. அவருடன் கை கோர்த்தாடிய தோனி, 2 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 22 ஓட்டங்களை எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது சென்னை. ஐ.பி.எல் இறுதிப்போட்டி ஒன்றில் பெற்றுக்கொண்ட அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலேயே டவானை பறிகொடுத்தது. எனினும் சச்சினின் நிதானமான துடுப்பாட்டம், (48) அணியை ஓவருக்கு 6 ரன்கள் என்ற நிலையில் கொண்டு சென்றது. எனினும் மறுமுனையில் ஆடிய அனைவரும் குறைவான் ஆட்டங்களுக்கு ஆட்டமிழந்தன.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களையே எடுத்தது மும்பை அணி!

பந்து வீச்சில் ஜகதி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தோனியின் தலைமையில் சென்னை அணி வீரர்கள் களத்தடுப்பே இன்றைய கள நிலைமைகளை மாற்றி அமைத்ததாக தெரிவிக்கபப்டுகிறது.


இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில்,​​ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்,​​ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

சென்னையில் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் அதிரடி சதம் அடித்து அசத்திய முரளி விஜய் இந்த ஆட்டத்திலும் அசத்துவார் என உள்ளூர் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,​​ அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

முரளி விஜய் ஆட்டமிழந்ததும் களம் கண்ட சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு சிக்சர்,​​ 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார்.​ பிராவோ பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ரெய்னா,​​ மீண்டும் ஒரு முறை சிக்சர் அடிக்க முற்பட்டு வெளியேறினார்.

ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே களம் இறங்கிய கேப்டன் தோனி 18 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.​ போலார்டு பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து தோனி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் நிதானமாக விளையாடிவந்த ஹேடன் 31 பந்துகளில் ஒரு சிக்சர்,​​ 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து போலார்டு பந்துவீச்சில் சதீஷிடம் கேட்ச் கொடுத்தார்.​

20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்திருந்தது.​ மைக் ஹசி 15 பந்துகளில் 14 ரன்களுடனும்,​​ பத்ரிநாத் 22 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தொடங்கியது. அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் தவிர ஒருவரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.​ சச்சின் 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் ஹர்பஜன் சிங் ஓரிரு சிக்சர்கள் விளாசியபோதும் அணியை வெற்றி பெற வைக்க இயலவில்லை.​ அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்,​​ 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசினார்.

சென்னை அணியின் அஸ்வின், ​​ துஷாரா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.​

இந்த வெற்றியின் மூலம் சென்னை 10 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது.​ இப்போட்டியில் மும்பை அணி பெற்ற 2-வது தோல்வியாகும் இது

இன்றைய ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதவுள்ளன.

கடந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, இன்றும் தனது அசத்தலை தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மும்பை இன்று, வென்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற நினைக்கலாம்.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று சென்னையில் நடக்கும் 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

தொடருமா எழுச்சி?
தொடர்ச்சியான நான்கு தோல்விக்கு பின் எழுச்சி கண்ட சென்னை அணி, பேட்டிங் எழுச்சி பெற்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை வென்றது. இன்றும் இது தொடரும் என நம்பலாம். இதற்கு, "அதிரடி' நாயகன் முரளி விஜய், ரெய்னா, தோனி மற்றும் மார்கல் உதவுவார்கள் என தெரிகிறது. தவிர, கடந்த சில போட்டிகளில் ஏமாற்றும் ஹைடன் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் மைக்கேல் ஹசி, வாய்ப்பு பெறுவது உறுதி.

பவுலிங் நம்பிக்கை:
பவுலிங், பீல்டிங்கில் சொதப்புவது தான் சென்னை அணிக்கு பலவீனமாக உள்ளது. ஆனால் போலிஞ்சர் வரவால், தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவிர முரளிதரனும் அசத்துவதால், மும்பையின் ரன்குவிப்பை இவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று தெரிகிறது. தவிர, மார்கல், ரெய்னாவும் ஆறுதல் தரலாம்.

சச்சின் பலம்:
கடந்த இரு தொடர்களில் இல்லாத வகையில், இம்முறை மும்பை அணி பெரும் எழுச்சி கண்டுள்ளது. இதற்கு சச்சினின் அசத்தலான "பார்ம்' மற்றும் இளம் வீரர்கள் எழுச்சியும் காரணம். தவிர, இன்று ஜெயசூர்யா, இதுவரை வாய்ப்பு பெறாத டுமினி ஆகியோர் களமிறங்கலாம். திவாரி, ராயுடு, சதீஷ் இன்றும் கலக்க காத்திருக்கிறார்கள்.

"பெஸ்ட்' பவுலிங்:
மும்பை அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஜாகிர் கான், மெக்லாரென், மலிங்கா போன்றவர்கள் இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அசத்துகிறார்கள். கடைசி நேரத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசுவதில் வல்லவர்களான இவர்கள், எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப் படுத்துகின்றனர். சுழலில் ஹர்பஜன் மிரட்டல் தொடர்கிறது.

"டாஸ்' முக்கியம்:
"டுவென்டி-20' போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இன்று "டாஸ்' வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது உறுதி. இருப்பினும், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் விளையாடிய சென்னை அணி, 180 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. இதனால் இன்று கவனமாக விளையாடுவார்கள் என நம்பலாம்.

வெற்றி தேவை:
சென்னை அணி இதுவரை, பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ல் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. அடுத்த 5 போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றால் தான், அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. ஆனால் மும்பை அணியை பொறுத்த வரையில், பங்கேற்ற 8 போட்டியில் 7ல் வென்றுள்ளது. அடுத்து 6ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே, அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இதனால் இன்றைய போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனியா-சச்சினா?


இந்த முறை எப்படியும் கோப்பை வெல்வதில் மும்பை அணி உறுதியாக உள்ளது. இன்று சச்சினின் அணுகுமுறைக்கு வெற்றி கிட்டுமா? அல்லது அமைதியாக இருந்து, கடைசி நேரத்தில் ஏதாவது செய்து, திடீர் பிரமிப்பை ஏற்படுத்தும் தோனிக்கு வெற்றி கிடைக்குமா? என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, இன்றைய போட்டியை பார்க்க எவ்வளவு விலை கொடுத்தாதவது, டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என ரசிகர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் டிக்கெட் விலை மூன்று மடங்கு வரை அதிகமாக "பிளாக்கில்' விற்கப்படுகிறது. * பொதுவாக சென்னை, சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணிக்கு தான் அதிக ஆதரவு இருக்கும். ஆனால், இன்று சச்சினின் மும்பை அணி விளையாடுவதால், சென்னை அணிக்கு முழுமையான ஆதரவு கிடைப்பது சந்தேகமே. சென்னை வீரர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெறலாம்.

துவக்க ஆட்டக்காரர் நமன் ஓஜாவின் அபார ஆட்டத்தாலும், ஷான் வாட்சனின் அதிரடி ஆட்டத்தினாலும் சிறப்பாக ரன்களைக் குவித்த இராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதிக் கட்டத்தில் அடுத்ததடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் தோல்வியைத் தழுவியது.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனைப் படைத்த 246 ரன்களைக் கடந்து வெல்ல வேண்டும் என்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இராஜஸ்தான் ராயல்ஸிற்கு மைக்கேல் லாம்ப், நமன் ஓஜா சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். முதல் 5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தனர். 7.2 ஓவர்களில் 69 ரன்களை எட்டியிருந்த நிலையில் லாம்ப் 37 (4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர்) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆட வந்த அதிரடி மன்னன் யூசுஃப் பத்தான், சந்தித்த முதல் பந்தையே பெளண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை தூக்கியடிக்க, அது சிக்ஸர் ஆகியிருக்கும். ஆனால், போலிங்கர் நம்பமுடியாத வகையில் அதனை பிடிக்க, நிலை தவறி அவர் பெளண்டரிக் கோட்டிற்கு வெளியே விழ நேர்ந்தபோதும், பந்தை மேலே எறிந்துவிட்டு, பிறகு மீண்டும் கோட்டிற்குள் வந்து பந்தைப் பிடித்து பத்தானை ஆட்டமிழக்கச் செய்தார். இன்றைய போட்டியின் அபார தருணம் இது.

அடுத்து ஆட வந்த ஷான் வாட்சன் ஓஜாவுடன் இணைந்து மின்னல் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

தீர்ந்தது சென்னை அணி என்று கருதும் அளவிற்கு இவர்கள் இருவரும் நடத்திய அதிரடிக் கச்சேரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முரளிதரனின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினார் வாட்சன். இவர்கள் இருவரும் இராஜஸ்தான் அணியின் எண்ணிக்கையை 15வது ஓவரின் முடிவில் 175 ரன்களுக்கு உயர்த்தினர்!

அபாரமாக ஆடிய வாட்சனை வீழ்த்தினார் போலிங்கர். 25 பந்துகளில் 5 பெளண்டரிகளுடனும், 5 சிக்ஸர்களுடனும் 60 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார் வாட்சன்.

மறுமுனையில் மிகச் சிறப்பாக ஆடி சிக்ஸர்களாகவும், பெளண்டரிகளாகவும் பறக்கவிட்டார் ஓஜா. ஆனால் அடுத்து ஆடவந்த ஃபைஸ் ஃபசாலும், அபிஷேக் ஜூன்ஜூன்வாலாவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இராஜஸ்தானின் ரன் குவிக்கும் வேகம் தடைபட்டது. அதுவே அந்த அணிக்கு தோல்வியாகவும் முடிந்தது. அதுவரை சென்னை அணிக்கு இணையாக ரன் வேகத்தை கூட்டிய இராஜஸ்தான், இறுதி கட்டத்தில் முடங்கியது. போலிங்கரின் சமயோசித பந்து வீச்சும் அதற்கு காரணமாக அமைந்தது.

20 ஓவர்களின் முடிவில் இராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஓஜா 55 பந்துகளை எதிர்கொண்டு 8 பெளண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் எடுத்திருந்தார். மிகச் சிறப்பான ஆட்டம் இது. முரளி விஜய் ஆடிய ஆட்டத்திற்கு சற்றும் குறையாத சிறப்புடையது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்குக் காரணம் டக் போலிங்கரின் சிறப்பான பந்து வீச்சாகும். 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க்கல் 4 ஓவர்களில் 56 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான சிக்ஸர்களை அடித்ததற்கு சிறப்பு விருதும், ஆட்ட நாயகன் விருதும் முரளி விஜய் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உயர்ந்துள்ளது. இராஜஸ்தான் 6வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

சென்னை வீரர் முரளி விஜய் அதிரடியாக எடுத்த சதமும், மூன்றாவது விக்கெட்டிற்கு மார்க்கலுடன் சேர்ந்து 64 பந்துகளில் எடுத்த 152 ரன்களும் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உதவின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில், இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் - மேத்யூ ஹைடன் இணை அதிரடித் துவக்கத்தைத் தந்தது.

மேத்யூ ஹைடன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஆட வந்த சுரேஷ் ரெய்னா 7 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடு்த்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் முரளி விஜய் சிக்ஸர்களும் பெளண்டரிகளும் அடித்து அணியின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்த்தினால். அவருடன் இணை சேர்ந்த மார்க்கலும் அதிரடியாக ஆடினார்.

இவர்கள் இருவரும் இணைந்து 64 பந்துகளில் 152 ரன்களைக் குவித்து சாதனை படைத்தனர். மார்க்கல் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முரளி விஜயின் ஆட்டத்தில் நெருப்பு பறந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரி்ல் ஆட்டமிழந்த விஜய், வெறும் 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 127 ரன்களைக் குவித்தார்!

விஜயின் அதிரடி ஆட்டத்தால் கடைசி 10 ஒவர்களில் மட்டும் 157 ரன்களைக் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஒவர்களில் 246 ரன்களை எட்டியது. இது ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதில் 17 சிக்ஸர்களும் 19 பெளண்டரிகளும் அடக்கம்.

கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸி. பந்து வீச்சாளர் வாட்சன் 4 ஓவர்களில் 47 ரன்களைக் கொடுத்துள்ளார்.

இன்று விஜய் ஆடிய ஆட்டம் சென்னை ரசிகர்களால் மட்டுமின்றி, தொலைக்காட்சியில் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீ்ண்ட காலம் நினைத்து நிற்கும்.

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய் 39 பந்துகளில் 78 ரன்களை விளாசினார்.

இருப்பினும் கடைசியில் தோனியையும், மோர்கெல்லையும் அடுத்தடுத்து ஸ்டெய்னும், காலிஸும் வீழ்த்த கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது வினய் குமார் பந்து வீச பத்ரிநாத் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

ரெய்னா இதில் கிராஸ் செய்து பேட்டிங் முனைக்கு வந்து அடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபாரமாஅன சிகருக்குத் தூக்க ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாகத் திரும்பியது.

துவக்கத்தில் முரளி விஜய் இன்று அனாயாச மட்டை சுழற்றலில் ஈடுபட்டார். அவர் பிரவீண் குமாரின் 2-வது ஓவரில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாச ஸ்கோர் 3 ஓவர்கள் முடிவில் 38 ரன்களை எட்டியது.

அதன் பிறகு அனில் கும்ளே பந்து வீச வந்தார் அப்போது 12 ரன்கள் எடுத்த ஹெய்டன் ஸ்டம்ப்டு ஆனார்.

ஆனால் அதன் பிறகும் முரளி விஜய் நிறுத்தவில்லை. அவர் கெவின் பீட்டர்சன் பந்துகளில் மேலும் 3 சிக்சரக்ளை வெளுத்தார். 4 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் அடித்த முரளி விஜய் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 105/2 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு கும்ளே 4 ஓவர்களில் 16 ரன்களையே விட்டுக் கொடுத்தார். டேல் ச்டெய்ன் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதனால் தோனி 19 பந்துகளில் 14 ரன்கள் என்று பிளேடு போட்டு ஆட்டமிழந்ததால் 16.3 ஓவரில் ஸ்கோர் 138 ரன்களைத்தான் எட்ட முடிந்தது.

இது ரெய்னாவிற்கு சுமையை ஏற்றியது. இன்னொரு முனையில் மோர்கெல் விக்கெட்டை ஜாக் காலிஸ் வீழ்த்த, பத்ரிநாத், வினய் குமாரிடம் ஆட்டமிழந்தார். இதனால் லேசான டென்ஷன் ஏற்பட்டது.

ஆனால் ரெய்னா கடைசியில் சிக்சர், பவுண்டரி அடித்து 19-வது ஓவரிலேயே வெற்றியை ருசிக்கச் செய்தார். இவர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

சென்னை அணி 165/5 என்று வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சேவாக் 38 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்தார் மன்ஹஸ் 22 பந்துகளில் 32 ரன்களும், பாட்டியா 9 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்களும், தில்சான் 24 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி சார்பாக பந்துவீச்சில் முரளிதரன் சிறப்பாக பந்து வீசினார் இவர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார் (தில்சான் ,சேவாக் )

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக ஹைடன் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்தார். ரெய்னா 34 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தமிழக வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் தலா 14 ரன்கள் எடுத்தனர்.

காயம் காரணமாக கேப்டன் டோணி 10 நாள் ஓய்வில் இருப்பார் என்று வெளியான செய்தி தவறு. அவரால் விரைவிலேயே விளையாட முடியும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டோணிக்கு காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் பத்து நாள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பத்து நாட்கள் டோணி விளையாட மாட்டார், அவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என செய்திகள் வெளியாகின.

இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி அதிகாரி ருஸ்ஸல் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை டோணி நல்ல நிலைக்குத் திரும்பினால், அவரால் செவ்வாய்க்கிழமையன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் நிச்சயம் விளையாட முடியும்.ட

அவருக்கு 10 நாள் ஓய்வு அளிக்கப்படவில்லை. அவரால் முடிந்தால் நிச்சயம் விளையாடுவார் என்றார்.

முன்னதாக சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன் கூறுகையில், டோணியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என்று கூறியிருந்தார். பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை டெல்லியில், டெல்லி அணியையும், ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் சந்திக்கவுள்ளது.

டோணி இன்னும் முழு உடல் தகுதியைப் பெறாத காரணத்தால் இந்த இரு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சார்பாக தோனி ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் பத்ரினாத் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் முரளி விஜய் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களைடும் இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

சென்னைசூப்பர் கிங்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 2010 IPL தொடரில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்து சறுக்கலுடன் 3வது ஐபிஎல் தொடரை ஆரம்பித்துள்ள டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆடிய இரு போட்டிகளிலும் அசத்தலாக வெற்றி பெற்ற தெம்புடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸை இன்று சந்திக்கிறது.

அதேபோல இன்னொரு போட்டியில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சங்கக்காரா தலைமையிலன கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது. இந்த இரு அணிகளும் தத்தமது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் டோணி தலைமையிலான சென்னை அணி ஆயத்தமாகி வருகிறது. அதேசமயம், ஹாட்ரிக் வெற்றியை சுவைக்க ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா அணி உறுதியுடன் உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளை வீழ்த்தியது. ஆனால் 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியுற்றது. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து தொடரில் 6வது இடத்தையே பிடித்தது.

இந்த ஆண்டு தொடரிலும் முதல் இரு போட்டிகளில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தியுள்ளது கங்குலி தலைமையிலான கொல்கத்தா. தற்போது 3வது போட்டியாக சென்னையை சந்திக்கவுள்ளது. 2008ல் நடந்தது போல இந்த ஆண்டும் நடந்து விடுமோ என்ற பீதி கொல்கத்தா ரசிகர்களின் மனதில் உள்ளது.

ஆனால் அப்படி நடந்து விடாமல் தடுத்து வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் கொல்கத்தா அணி உள்ளது. எனவே இந்தப் போட்டி பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் மழையால் பாதிப்பு வரலாம் என்று தெரிகிறது. எனவே கொல்கத்தா வீரர்கள் சற்று கவலையுடன் காணப்படுகின்றனர்.

ஆறுதல் தேடும் முயற்சியில் பெங்களூர், பஞ்சாப்...

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாபும், பெங்களூரும், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மோதவுள்ளன.

பெங்களூர் அணி தனது முதல் போட்டியில், கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்தது. அதேபோல பஞ்சாப் அணியை முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் காலி செய்தது.

பெங்களூரும், பஞ்சாபும் இதற்கு முன்பு 4 முறை மோதியுள்ளன. இதில் 3 முறையும் பஞ்சாபே வென்றது. ஒரு முறை மட்டுமே பெஙகளூர் வெற்றி பெற்றது.

இன்று உகாதி தினம். எனவே பெங்களூர் ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக வெற்றியைத் தருமா பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடின.இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி டாஸ் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரண்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில்150 ரன்கள் எடுத்தது.

11 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர் வெற்றி பெற்றது.