அசலுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தைத் தயாரிக்கப்போகிறார் தயாநிதி அழகிரி. இந்தப் படத்தை இயக்ககிறார் கௌதம்மேனன்.
இந்தப் படத்தின் கதை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரை மையப்படுத்தியதாகும்.



காவல்துறைக்கு சீக்ரெட் ஏஜென்டாக செயல்படும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கிறார் அஜித். அசல் அவ்வளாவாக வசூலையும் பேரையும் தராவிட்டாலும் இந்தப் படம் பெரிய அளவுக்கு ஹிட்டாகும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் அஜீத். அதற்குக் காரணம் கவுதம்மேனன்தான்.


இவருடைய சமீபத்திய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதால் இந்தப் படமும் தன்னை மேலும் பல மடங்கு உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறார் அஜித். அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க யாரை புக் பண்ணலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறது இயக்குநர் தரப்பு.

0 comments