அதிகபட்ச வசுல் செய்தபடங்கள் 10 கோடிக்குமேல்

1.அயன்
2.ஆதவன்
3.பேராண்மை
4.படிக்காதவன்
5.கந்தசாமி
6.நாடோடிகள்
7.வேட்டைக்கரன்
8.வில்லு
9.உன்னைப்போல் ஒருவன்


5 - 10 கோடிவரை வசுல் செய்தபடங்கள்
1.வெண்ணிலா கபடிகுழு
2.சிவாமனசுல சக்தி
3.தோரானை
4.மாசிலாமணி
5.நினைத்தாலே இனைக்கும்


2009ல் வெளியான 131 படங்களில் தயாரிப்பாளர்கள் சுமார் 510 கோடி முத்லீடு செய்திருக்கிறார்கள். ஆனால் போட்ட முதல் திரும்பவராமல் நஷ்டத்தை சந்தித்தபடங்கள் எண்ணிக்கை எராளம். அசலை நெருங்கிய படங்கள் 10. அசலையும் தாண்டி லாபத்தை கொடுத்தபடங்கள் 5. வருட்ந்தோறும் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டத்தை சந்திப்பது வருட நேர்த்திக்கடன் சடங்காகி விட்டது. தன் படத்தால் நஷ்டம் என தெரிந்தும் நடிகர்கள் ஒவ்வொருபடத்திற்கும் சம்பளத்தை உயர்த்துவதை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித முயற்சியிலும் ஈடுபடாத கவலைக்குரிய விஷயம். தயாரிப்பாளர்களிடம் நிலவுவரும் ஒற்றுமையின்மை, போட்டி மனப்பான்மை, ஒரே படத்தில் கோடீஸ்வரளாகி விட வேண்டும் என்கிற பேராசை பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்துவதை காரணமாகிவிடுகிறது.

பட அதிபராக - புகழ்வெளிச்ச ஆசையில் படமெடுக்க வரும் புதியவர்களே எந்த திரைப்படதுறை அடிப்படை அறிவும் இன்றி புதுமுகங்கள் நடிக்கும் படத்தை எடுத்து நஷ்டமடையும் 70% , தயாரிப்பாளர்கள் கோடம்பாக்கத்திற்கு வருட்ந்தோறும் புதியவர்களாகவே இருப்பது வாடிக்கையான சமாச்சாரம். தொடரும் நஷ்டம், தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து சின்னபின்னமாகி வரும் சிறுபட தயாரிப்பாளர்கள், இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு வரும் நாட்களில் விரிவான கட்டுரைகளில்
காண்போம்.

0 comments