நடிப்பு: அஜித் , பிரபு , சமீரா ரெட்டி , பாவனா , சுரேஷ் , யூகி சேது, சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா.
இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்
கதை:

பிரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இரண்டாவது மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.

சரண் தன்னுடைய வழமையான பாணியிலேயே அசல் திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறார்.

ஜீவானந்தம் பிரான்சில் சட்டப்படி பல‌ நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடாத்தி வருகிறார். ஜீவானந்தத்திற்கு மூன்று மகன்கள் சட்டபூர்வ மனைவிக்கு சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா என்ற இருமகன்கள். இல்லீகல் மனைவிக்கு மகனாக‌ சிவா (மற்றொரு அஜீத்).

ஜீவானந்தம் சிவாவை நம்பித்தான் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைக்கிறார். ( நம்ம ஹீரொவாச்சே) இதனால் மற்ற இரு மகன் மாருக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத சட்டவிரோத‌ ஆயுத வியாபாரம் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில் ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார்ஆயூத கடத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் கும்பல் கடத்துகிறது. அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார். அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். சமீராவுக்கு அஜித் மேல் காதல்.

மும்பையில் ஜீவானந்ததின் நண்பரான பிரபுவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். பிரபுவிடம் வேலை பார்க்கும் பாவனாவும் கண்டவுடன் காதல் கொள்கிறார். மேலும் பிரபுவிடம் வேலைபார்க்கும் டான் சமோஷா பேரைப்படித்தாலே காமெடி பீஸூனு தெரியுது தானே ஆமாம் கதையின் சொந்தக்காரரான யூகி சேது. அவருக்கு இரண்டு அடிப்பொடிகள் ஜீரா , சட்னி என்ற பெயர்களுடன் இவர்கள் செய்யும் சேட்டைகள் சிறிது சிரிப்பை வரவழைக்கின்றன.

இடையே பாவனா இரண்டு டூயட்டும், சமீரா ஒரு டூயட்டும் முடிக்கின்றனர். மும்பை கும்பலில் இருந்து ராஜீவ் கிருஷ்ணாவை மீட்டும் திரும்பும் போது அஜீத்தை போட்டு தள்ளுகின்றனர் ராஜீவும், சம்பத்தும். அத்தோடு இடைவேளை விட்டாச்சு.

இரண்டாம் பாதியில் அந்த குண்டடியில் இருந்து நம்ம ஹீரோ தப்பி வருகிறார். ( நம்ம தலையை கொல்ல இன்னும் துப்பாக்கி குண்டு கண்டு பிடிக்கவில்லை ) அப்புற‌ம் பிரபு , பாவனா , யூகி சேதுவுடன் பிரான்ஸ் கிளம்புகிறார்.

பிரான்சில் கடும் போராட்டத்தின் பின் என்னத்துக்காக தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற மிகப்பெரிய இரகசியத்தை கண்டு பிடிக்கிறார். ( நமக்கு படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அது தெரிந்து விடும் அது வேறு)

அப்புறமென்ன நம்ம தமிழ்சினிமா போர்முலாப்படி வில்லன்களை ( சகோதரர்களை ) வேட்டையாடுகிறார். பாவனாவை கைப்பிடிக்கிறார்.இதற்கிடையில் பாவனாவுடன் ஒரு டூயட் பாடி முடிக்கிறார். மொத்தத்தில் சமீராவும் பாவனாவும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். அஜித் கூட இருப்பவர்கள் அடிக்கும் ஜால்ரா சகிக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அஜித் டான்ஸ் ஆடவில்லை. அஜித் இதை தொடர்ந்து கடைப்பிடித்தால் நல்லது.ஒளிப்பதிவாளர் புதியவர் என்றாலும் நன்றாக செய்திருக்கிறார். அவரை பாராட்டியே ஆகவேண்டும். அடுத்து சண்டைக்காட்சிகளும் பாடல்களும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

சரண் கட்டாயம் தன்னை மாற்றியாக வேண்டும். இல்லையேல் ரசிகர்கள் அவரை மறந்து விடுவார்கள்.

மொத்தத்தில் அசல் அஜித் ரசிகர்களுக்கான படம்.

அசல் அரைத்த மாவு



வேறு சில விமர்சனங்கள்.

அசல் – திரைப்பட விமர்சனம்

அசல்

அசல் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

2 comments

  1. Neethirajah varnan // February 5, 2010 at 9:33 AM  

    mmm i thing ur a vijay fan.

  2. Easakimuthu // February 10, 2010 at 1:18 AM  

    see no body will be 100% perfect and cant able to take 100 % perfect film. Dont disgarage any body. Films for what purpose only entirements thats all