தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.


இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.


விழாவில் பேசிய நடிகர் அஜீத், இந்த விழாவில் முதல்வர் கலைஞர் மீதான அன்பும், மரியாதையும் நான் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். இவ்வாறு அஜித் பேசியுள்ளார்.


இவ்வாறு இவர் தமிழருக்கு எதிராக பேசுவது முதல் முறையல்ல முன்பு இலங்கைத் தமிழருக்காக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். பின்பு வெளிநாடுகளில் அவருடைய ஏகன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வேண்டாவெறுப்பாக கலந்து கொண்டார். மேடையில் பேசும்போதும் தேவையில்லாத விடயங்களை பேசி அனைவரின் கண்டனத்திற்கு உள்ளானார்.


அதன்பின் சிறிது காலம் அடங்கியிருந்த அவர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார். தமிழர்களின் தயவில் தன்னுடைய படம் ஓட வேண்டும், தமிழர்களின் பணம் வேண்டும். ஆனால் தமிழர்களுக்காக தான் எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார். இதற்கு என்ன காரணம்? அவர் தான் தமிழன் இல்லை என்பதால் அப்பிடிப் பேசுகிறாரா? அல்லது தான் என்ன பேசினாலும் என்ன செய்தாலும் தன்னை தல தல என்று தலையில் தூக்கிக் கொண்டாட சுரணைகெட்ட‌ முட்டால் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு நடந்து கொள்கிறாரா?

இனியாவது அஜித் ரசிகர்கள் உணர்ந்து செயற்படுங்கள். தமிழருக்கு எதிரானவர்களை புற‌க்கணிப்போம்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு..


உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.
இக்கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் உங்களின் வாக்கை அளிக்க மறக்காதீர்கள்.


web designers guide

4 comments

  1. Unknown // February 8, 2010 at 4:39 AM  

    Your Article is waste Dont Post This type of Articles this one is first and last one for you

  2. settaikkaran // February 8, 2010 at 4:43 AM  

    அதென்னண்ணே, அசலைப் பத்தி விமர்சனமும் எழுதி, அஜீத் குமார் படத்தையும் போட்டுக்கிட்டு, சூடு சொரணைன்னு எழுதிக்கிட்டு....தூள்...இப்படியெல்லாம் எழுதினா பெரிய பதிவராயிரலாமுன்னு யாராவது சொல்லிட்டாங்களா? முதல்லே கொஞ்சம் மொக்கை போட்டுப் பழகுங்கண்ணே! அப்பாலிக்கா விமர்சனமெல்லாம் பண்ணலாம். :-))))

  3. krish // February 8, 2010 at 5:44 AM  

    இந்த பக்கம் தமிழ் தமிழ்னு பேசிகிட்டு வருமான வரி கூட ஒழுங்கா கட்டமாட்டானுங்க. வருமான வரித்துறையினர் அட்டவணையில் ஒழுங்காக வரி கட்டுபவர் பட்டியலில் அஜித் முதலிடத்தில் உள்ளார். உங்களுக்கு எல்லாம் ஆம்பிளை மாதிரி மூஞ்சிக்கு நேரா பேசினா பிடிக்காதே. அவர் சத்தம் போடாமல் அவர் வேலையை ஒழுங்கா தான் செய்யுறார். நான் அஜித் ரசிகன் இல்லை. உண்மையான தமிழின துரோகிகளை பட்டியலிட்டால் உங்களால் அடுத்த பதிவு எழுத பிளாக்கில் இடம் இருக்காது.

  4. Jeevaa // February 10, 2010 at 1:33 AM  

    Nermai Ulla Ajith um Poraamai padda Vijay rasiganum.....